June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா

1 min read

2,312 people have corona in Tamil Nadu today

15.7.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து இன்று (ஜூலை 15 ம் தேதி) ஒரே நாளில் 2,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
மாநிலத்தில் இன்று (ஜூலை 15) 33,058 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் 2,312 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,13,121 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,682 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34, 57,605 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியானதால் பலியானோர் எண்ணிக்கை 38,029 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டது. இன்று முன்தினம் (ஜூலை 14 ம் தேதி ) 682 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 15 ம் தேதி) சென்னையில் 618 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,487 ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.