தமிழகத்தில் இன்று 2,340 பேருக்கு கொரோனா
1 min read
2,340 people have corona in Tamil Nadu today
16.7.2022
தமிழகத்தில் இன்று 2,340 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,312-ல் இருந்து 2,340 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 15 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,599 ஆகும்.
கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,029 ஆக உள்ளது. தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34,541 ஆகும். தலைநகர் சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 618-ல் இருந்து 607 ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 306 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 149 பேருக்கும், கோவை -165, சேலம் -88, காஞ்சிபுரம், 73, நெல்லை -71 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.