தமிழகத்தில் இன்று 2,316 பேருக்கு கொரோனா; ஒருவர் சாவு
1 min read
2,316 people in Tamil Nadu have corona virus today; One died
17.7.2022
தமிழகத்தில் இன்று 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் இறந்தார்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்று 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 17 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,458 ஆகும்.
ஒருவர் சாவு
தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 135 ஆகும். தலைநகர் சென்னையில் இன்று 596 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.