மாணவி ஸ்ரீமதி சாவில் மர்மம்- போராட்டம் தீ வைப்பு
1 min read
Mysterious death of student Smt.- protest arson
17.7.2022
திருவண்ணாமலையில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு போராட்டம் நடந்தது. இதில் தீ வைப்பு சம்பவமும் நிகழ்ந்தது.
மாணவி சாவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.
மாணவி மரணம்
இந்நிலையில் மாணவி சில நாட்களுக்கு முன்பு விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை போலீசார் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் காயம்
இதற்கிடையே அவரது உடலில் காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும் மாணவியின் சாவு குறித்து விசாரித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை வலியுறுத்தி சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில்ல் மறியல் போராட்டம் நடந்தது. மேலும் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
தீ வைப்பு
இந்நிலையில் இன்று பள்ளி முன்பு நடந்த போராட்டம் வன்முறையானது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு நடத்தப்பட்டது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சூறையாடி, வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர் பேட்டி
இதற்கிடையே தான் பள்ளி மாணவி தரப்பு வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர். போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.