தமிழகத்தில் இன்று 2,014 பேருக்கு கொரோனா
1 min read
2,014 people have corona in Tamil Nadu today
2.7.2022
தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 14 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,033 இல் இருந்து 2,014 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 466 இல் இருந்து 431 ஆக குறைந்தது. தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,153 இல் இருந்து 15,843 ஆக குறைந்துள்ளது. 2,324 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 8-வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.