இந்தியாவில் புதிதாக 21,411 பேருக்கு கொரோனா
1 min read
21,411 new cases of corona in India
23.7.2022
இந்தியாவில் புதிதாக 21,411 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வியாழக்கிழமை பாதிப்பான 21 ஆயிரத்து 566 மற்றும் நேற்றைய பாதிப்பான 21 ஆயிரத்து 880-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 68 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 726 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 379 ஆக
அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து
100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 201 கோடியே 68 லட்சத்து 14 ஆயிரத்து 771 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.