June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்தவர் கைது

1 min read

ATM The person who deposited fake notes in the machine was arrested

23.7.2022

பெங்களூருவில் ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளநோட்டு

பெங்களூரு கோவிந்தபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனபுரா வெளிவட்ட சாலையில் ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம். எந்திரம் மூலம் பணத்தை டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. இந்த நிலையில் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ஒரு மர்மநபர் ரூ.17 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்து இருந்தார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்ததாக நஞ்சப்பா காலனியை சேர்ந்த தச்சு தொழிலாளியான முகமது அதீக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.