June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா

1 min read

20,279 new cases of corona in India

24.7.2022
இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா
உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை பாதிப்பான 21 ஆயிரத்து 880 மற்றும் நேற்றையதின பாதிப்பான 21 ஆயிரத்து 441-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 88 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 143 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 201 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 453 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.