அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் காற்றாலை முழுவதும் எரிந்து சாம்பல்
1 min read
Wind turbines burn to ashes in US lightning strike
24.7.2022-
அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் காற்றாலை முழுவதும் எரி்ந்து சாம்பலானது.
இடி-மின்னல்
அமெரிக்காவில் பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளம், மேகவெடிப்பு ஆகியவற்றுடன் இடி, மின்னலால் ஏற்படும் பாதிப்புகளும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குரோவெல் நகர் அருகே பெரிய காற்றாலை ஒன்று இயங்கி வருகிறது.
இதன் மீது திடீரென மின்னல் தாக்கியதில், அது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதன் இறக்கையில் தீப்பிடித்தபோதும், தொடர்ந்து சுழன்று கரும்புகை பரவியது.
இதனை நெடுஞ்சாலை வழியே வாகனத்தில் சென்றவர்கள் தங்களது கேமிராவில் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 30 லட்சத்திற்கும் கூடுதலானோர் அதனை பார்வையிட்டு உள்ளனர்.
தீப்பிடித்ததும், நிற்காமல் சுழன்றதில், ஓர் இறக்கையில் இருந்து தீ, மற்ற இறக்கைகளுக்கும் பரவியுள்ளது. அதன்பின்னர் காற்றாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது.
குரோவெல் தீயணைப்பு துறையினருக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்களில் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதுபற்றி தீயணைப்பு துறையின் தலைவர் பெர்ரி ஷா கூறும்போது, அதுபோன்ற தீயை அணைக்கும் பணியை மேற்கொள்வதற்கு போதிய வசதிகள் எங்களிடம் இல்லை என கூறியுள்ளார். இதனால், தீ அதுவாகவே அணைவதற்கு தீயணைப்பு வீரர்கள் விட்டு விட்டனர்.
இதுபோன்ற சூழலில் தீயை அணைக்கு முயற்சிப்பது பாதுகாப்பானது அல்ல என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.