June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு, 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

1 min read

Adani Group has crossed 20 billion dollars in market capitalization this year

26/7/2022
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.

எடப்பாடி பழனிசாமி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. புகார் கூறியது. மேலும் இதுதொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இடைக்கால தடை

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும் மேல்முறையீடு செய்தது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. இதற்கிடையே தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் ஆஜராகி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, ‘எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’ என முறையிட்டார்.

ஒத்தி வைப்பு

இந்த முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரமணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை ஆகஸ்ட் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.