இந்தியாவில் புதிதாக 18,313 பேருக்கு கொரோனா
1 min read
18,313 new corona cases in India
27.7.2022
இந்தியாவில் புதிதாக 18,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது திங்கட்கிழமை பாதிப்பான 16 ஆயிரத்து 866 மற்றும் நேற்றைய பாதிப்பான 14 ஆயிரத்து 830-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
57 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 202 கோடியே 79 லட்சத்து 61 ஆயிரத்து 722 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.