June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

குஜராத்தில் விஷ சாராய சாவு 40 ஆக உயர்வு

1 min read

Alcohol poisoning deaths rise to 40 in Gujarat

27.7.2022
குஜராத்தில் விஷ சாராய சாவு 40 ஆக உயர்ந்துள்ளது.

விஷசாராயம்

குஜராத்தில் 40 பேரை பலி கொண்ட விஷ சாராய சம்பவம் பற்றிய அதிர்ச்சி பின்னணி வெளிவந்து உள்ளது. வதோதரா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கடந்த திங்கட் கிழமை காலை குறைந்த விலையில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்த பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக நேற்று அதிகரித்தது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கடந்த 12 மணிநேரத்தில் பொடாட் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 40 ஆக உயர்ந்து உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்து உள்ளார். விஷ சாராயம் விற்றதற்காக இதுவரை 10 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.