June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 941 பேருக்கு கொரோனா

1 min read

941 people have corona in Tamil Nadu today

9.8.2022
தமிழகத்தில் இன்று 941 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறையத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 941 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 202 பேர், கோவையில் 107 பேர், செங்கல்பட்டில் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் 441 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 8 ஆயிரத்து 911 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 244 பேரும், கோவையில் 868 பேரும், செங்கல்பட்டில் 670 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.