2024-ம் ஆண்டுக்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார்
-நிதிஷ்குமார் பேட்டி
1 min read

Modi will not be PM after 2024 Nitishkumar interview
10.8.2022-
2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் 2024ம் ஆண்டில் வெற்றி பெற மாட்டார்கள் எனவும், 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
நிதிஷ்குமார்
பீகாரில் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜ., உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 8வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நிர்ப்பந்தித்தது
பாஜ., தான் என்னை முதல்வராக இருக்கும்படி நிர்பந்தித்தது. பா.ஜ., உடனான கூட்டணியை விரும்பவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து விலகுவது என்பது கட்சி இணைந்து முடிவெடுத்தது. நான் 2024 வரை நீடிப்பேனா என அவர்கள் (பா.ஜ.,வினர்) என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், 2014 போல இருக்காது. 2014ல் ஆட்சிக்கு வந்தவர்கள், 2024ல் வெற்றி பெற மாட்டார்கள்.
2024க்குப் பின்…
2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார். வாஜ்பாய் உடன் மோடியை ஒப்பிட முடியாது. 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறேன். நான் பிரதமர் பதவிக்கான போட்டியாளராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.