June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு; 5 பேர் கைது

1 min read

Minister Palanivel Thiagarajan threw a shoe at his car; 5 people arrested

13/8/2022
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதி அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்டது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

5 பேர் கைது

இந்த நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.5 பேரை கைது செய்து அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கைதானவர்களில் 3 பேர் திருச்சி, 2 பேர் மதுரையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.