இந்தியாவில் புதிதாக 14,092 பேருக்கு கொரோனா
1 min read
14,092 new cases of corona in India
14.8.2022
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சரியத்தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் புதிதாக 14,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 16 ஆயிரத்துக்குள் (15 ஆயிரத்து 815) அடங்கியது.
இந்த நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 092- ஆக குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 41 பேர் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 037 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 861 ஆக குறைந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,403 பேர் குணம் அடைந்துள்ளனர்.