வெளிநாடுகளில் இருந்தபோது மத்திய மந்திரி ஜெய்சங்கர் அரசியல் பேச மறுப்பு
1 min read
Union Minister Jaishankar refused to talk about politics when he was abroad
17.8.2022
வெளிநாடுகளில் இருக்கும்போது நான் இந்திய அரசியல் பற்றி பேசமாட்டேன் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறிய்யுள்ளார்.
ஜெய்சங்கர்
தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பாங்காக் நகரில் அந்நாட்டில் வாழும் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது அவரிடம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதல் போக்கு குறித்து கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர், “நான் வெளிநாடுகளில் இருக்கும்போது இந்திய அரசியல் பற்றி பேசமாட்டேன். உங்களுக்கு அந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வேண்டுமென்றால் இந்தியாவுக்கு வந்து கேளுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அந்தக் கேள்விக்கு பதில் கூறுகிறேன் என்றார்.
இந்தியா-தாய்லாந்து நல்லுறவு, தற்சார்பு இந்தியா, வர்த்தகம் செய்வதில் கடினமின்மை, இந்தியப் பல்கலைக்கழகங்கள், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் போதிலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதிலளித்து கூறியதாவது, பாஸ்போர்ட் கொடுப்பதற்கு பல மாதங்கள் வரை ஆன காலம் எல்லாம் உண்டு. ஆண்டுக்கணக்கில் கூட ஆகி இருக்கிறது. தற்போது சில தினங்களில் பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்குவது என்பது இப்போது மிகவும் எளிதாகி இருக்கிறது. காகிதமற்ற டிஜிட்டல் முறையை ஊக்கப்படுத்தி இருக்கிறோம். அன்னிய செலாவணி முதலீடும் நல்ல நிலையில் இருக்கிறது . இவ்வாறு அவர் கூறினார்.