இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 15,754 பேருக்கு கொரோனா
1 min read
15,754 new corona cases in India in one day
19.8.2022
இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 15,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 12,608 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்ற 15,754 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15,220 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,36,85,535 ஆனது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,01,343 லிருந்து 1,01,830 ஆக அதிகரித்துள்ளது.
47 பேர் சாவு
கொரோனா தொற்றால் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக பதிவானது. இந்தநிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி வரை ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 253 பேர் இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,09,27,32,604 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,52,882 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.