June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 11,539 பேருக்கு கொரோனா

1 min read

Corona has infected 11,539 more people in India

21/8/2022
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால்,மொத்த பாதிப்பு 4,43,39,429 ஆனது. கொரோனா தொற்றில் இருந்து 4,37,12,218 பேர் மீண்டுள்ளனர்.

34 பேர் சாவு

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,27,332 ஆனது. தற்போது 99,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 26,58,755 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 209.67 கோடி டோஸ் ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.