June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தேர்வு மோசடி தடுக்க இணைய சேவை நிறுத்தம்

1 min read

Suspension of internet service to prevent examination fraud

21.8.2022
அசாமில் அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு நடக்கும் இடங்களில் 4 மணி நேரம் இணைய சேவையை நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்வு

அசாம் அரசுத்துறையில் காலியாக உள்ள 27 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெறுகிறது. இதனை எழுதுவதற்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வருகிற 28 முதல் செப்., 11 வரை நடக்கும் தேர்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா, தேர்வில் எவ்வித சிக்கல் மற்றும் முறைகேடின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இணைய சேவை

அதனை தொடர்ந்து தேர்வில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக, தேர்வு மையங்களை சுற்றி தேர்வு நடக்கும் நேரங்களில் இணைய சேவையை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மொபைல் போன் மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்யவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.