June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் நியமனம்

1 min read

Appointed Supreme Court Justice Chandrachud as Chairman of National Legal Services Commission

3.9.2022
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

தேசிய சட்ட சேவை ஆணையம்

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டின் பெயரை ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்து வருகிறார். மரபுப்படி சுப்ரீம் கோர்ட்டின் இரண்டாவது மூத்த நீதிபதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.