பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள்-மு.க.ஸ்டாலின் தகவல்
1 min read
4 new courts to hear criminal cases against Scheduled Castes-MK Stall’s information
4.9.2022
பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நீதிமன்ற கட்டிடம்
சென்னை, புரசைவாக்கம் வட்டம், வ.உ.சி நகரில் ரூ. 315 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னடுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உலக நீதிமன்றத்துக்கே அடையாளமாக சென்னை உயர்நீதிமன்றம் உள்ளது . பாரம்பரிய கட்டடங்கள் நம் வரலாறு. அதை பாதுகாப்பதில் அரசு கவனமாக உள்ளது. பாரம்பரிய கட்டடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது. சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் செயல்பட உள்ளன.
தமிழ் வழக்காடு மொழி
உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உச்சநீதிமன்றத்துக்கான கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.
பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.268 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.