இந்தியாவில் புதிதாக 6, 809 பேருக்கு கொரோனா
1 min read
6,809 new corona cases in India
4.9.2022
இந்தியாவில் இன்று புதிதாக 6, 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து ,809 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த சனிக்கிழமை 7 ஆயிரத்து 219 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்து 809 ஆக குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,44,49,726 லிருந்து 4,44,56,535 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 8,414 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,65,016 லிருந்து 4,38,73,430 ஆக உயர்ந்துள்ளது.
26 பேர் சாவு
மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 26 பேர் பலியாகினர். இதுவரை 5,27,991 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56,745 லிருந்து 55,114 ஆக குறைந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 213 கோடியே 20 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 19,35,814 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.