தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 470 பேருக்கு கொரோனா
1 min read
In Tamil Nadu, 470 people are infected with Corona in one day
4.9.2022
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 470 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (செப்.4) 470 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,70,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று 494 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,27,521 ஆக உயர்ந்து உள்ளது.
இன்று ( செப்.4) கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லாததால் எண்ணிக்கை 38,036 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (செப் 3ம் தேதி ) 82 ஆக இருந்த நிலையில் இன்று (செப் 4 ம் தேதி) சென்னையில் 84 ஆக உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,010 ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.