June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 445 பேருக்கு கொரோனா; ஒருவர் சாவு

1 min read

445 people in Tamil Nadu have corona today; One died

7.9.2022
தமிழகத்தில் இன்று 445 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் இறந்துள்ளார்.

கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 445 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 81 பேர், கோவையில் 59 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் புதுக்கோட்டையில் பாதிப்பு இல்லை. மருத்துவமனையில் 359 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் பலி

தமிழகத்தில் இன்று கொரோனாவால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 945 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.