8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்ந்தது
1 min read
After 8 years electricity tariff in Tamil Nadu has gone up
10.9.2022
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மின்கட்டணம்
கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்ததும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியதாகவும் காரணம் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு சமர்பிக்கப்பட்டது. பின்னர் மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டு வந்தது. பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண உயர்வுஇன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக்த்தில் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது.
புதிய கட்டணம்
100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டமும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியமும் தொடர்கிறது.
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாதம் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டணம் ரூ.72.50 உயர்ந்துள்ளது. 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 உயர்ந்துள்ளது. மொத்தமாக 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ரூ.297.50 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155ம், 700 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.275ம், 800 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு.395ம், 900 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.565ம் உயர்ந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.