மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசே காரணம்- அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
DMK blames government for student suicide-Annamalai
10-9.2022
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலைக்கு தி.மு.க. அரசே காரணம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
நீட்தேர்வு
நீட் தேர்வை பொறுத்தவரை பாஜகவுக்கு அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் கிடையாது. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு நல்லது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்சினை இருந்தது உண்மை தான். காரணம், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு தயாராவதற்கான பாடத்திட்டத்திற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன.
ஆனால் பாடத்திட்டம் மாற்றமடைந்த பின், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.
தற்கொலைக்கு தூண்டுகிறது
நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். மாணவர்களை தவறாக வழி நடத்தி தற்கொலைக்கு தூண்டுகிறது. திமுக அரசு மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசை காரணம். நீட் தேர்வை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. எந்த மாநில முதல் அமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்காத போது, தமிழ்நாடு முதல் அமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார் நீட் வேண்டாம் என திமுக சொன்னாலும்,தேர்வு இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்; டீ மாஸ்டரின் மகள் கூட தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மின்கட்டண உயர்வு
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தேவையற்றது. இது தமிழகத்தின் கருப்பு நாள். . மின் கட்டண விலை உயர்வை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தலில் திமுகவுக்கு பெரிய அடியாக இது இருக்கும்.
ராகுல் காந்தி பாதை யாத்திரை என்பது மக்களை இணைப்பதா அல்லது பிரிப்பதா என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.