July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

தெருநாய் கடித்தால் அதற்கு சோறு போடுபவர்களே பொறுப்பு-சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

1 min read

If a stray dog bites, those who feed it are responsible-Supreme Court action verdict

12.9.2022
கேரளாவில், சாலையில் சைக்கிள் தெருநாய் கடித்தால் அதற்கு சோறு போடுபவர்களே பொறுப்பு என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

தெருநாய்

கேரளா மாநிலம் அரை கிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது, திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று, சிறுவனை கடித்து குதறியது. சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெரு நாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிறுவனை கடித்த நாய் அதே நாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படும் நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரவு

இந்த நிலையில் தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே தடுப்பூசி போடுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளது.
மக்களின் பாதுகாப்புக்கும் விலங்குகளின் உரிமைகளுக்கும் இடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

21 பேர் சாவு

மாநில அரசின் தகவல் படி 2022ல் இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.
கேரளாவில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறி வருகிறது. இது குறித்து சமீபகாலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதை தொடர்ந்து மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ், மாநிலத்தில் கிடைக்கும் ரேபிஸ் தடுப்பூசியின் தரத்தை பரிசோதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேட்டுக் கொண்டார்.
கேரளா முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்த உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை திங்கள்கிழமை சந்தித்துப் பேச உள்ளதாக உள்ளாட்சித் துறை மந்திரி எம்.பி.ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
மேலும் மாநிலத்தில் 152 தொகுதிகளில் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) மையங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எம்.பி.ராஜேஷ் தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் (27,52,218), அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (20,70,921), மராட்டியம் (15,75,606) மற்றும் மேற்கு வங்காளத்தில் (12) ,09,232). மறுபுறம், லட்சத்தீவில் இதே காலகட்டத்தில் நாய் கடி வழக்குகளே இல்லை.
இது 2020 இல் 46,33,493 ஆகவும், ஒரு வருடம் கழித்து 17,01,133 ஆகவும் குறைந்துள்ளது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தமிழ்நாட்டில் (251,510) மற்றும் மராட்டியத்தில் (231,531) பதிவாகியுள்ளன.
இந்தியாவும் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட ரேபிஸ் வழக்குகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கிறது. இருப்பினும், செல்லப்பிராணிகளை விட தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.