June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுக அலுவலக சாவி வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு வெற்றி

1 min read

Another victory for Edappadi Palaniswami in the AIADMK office key case

12.9.2022
அதிமுக அலுவலக சாவி வழக்கில்
ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதன் மூலம் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் வெற்றி கிடைத்துள்ளது.

அ.தி.மு.க. அலுவலக சாவி

அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த பொருட்களும் கொள்ளை போனது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது.

ஒ.பன்னீர் செல்வம்

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று பிற்பகல் தொடங்கியது. விசாரணையின் போது பல்வேறுகேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பன்னீர் செல்வத்திடம் அ.தி.மு.க. அலுவலம் தொடர்ந்த இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *