காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
1 min read
Terrorist shot dead in gunfight in Kashmir
12.9.2022-
ஜம்மு காஷ்மீர் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டையால் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
பயங்கரவாதி
ஜம்மு காஷ்மீர் சோபியான் பகுதியில் உள்ள ஹெப் ஷிர்மால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெப் ஷிர்மால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
ஹெப் ஷிர்மால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு ஒன்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்த என்கவுன்டரில், ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஷோபியானின் ஹெப் ஷிர்மால் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர். மேலும் விவரங்கள் வெளியிடப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.