ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில்
பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி
1 min read

Jammu and Kashmir: 11 killed as bus overturns in valley
14.9.2022
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
பஸ் கவிழ்ந்தது
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் என்ற பகுதி நோக்கி இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர். சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிராரி நல்ஹா என்ற பகுதியில் சாலையில் சென்றபோது எதிபாராத விதமாக பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், ராணுவம், உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.