June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சென்னை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

1 min read

In the case of liquor policy violation, the enforcement department conducted raids at 40 places including Chennai

16.9.2022
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சென்னை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தயது.

ஊழல்

டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி துணை முதல் மந்தரி மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

மீண்டும் சோதனை

இந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் உள்ள 40 இடங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தியது.நெல்லூர் மற்றும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய நகரங்களில் உள்ள மதுபான வணிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய வளாகங்களில் சோதனை நடந்தது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், கடந்த 6ம் தேதி டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, தெலுங்கானா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலஙகளின் பல நகரங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.