July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு சென்றவர் கைது

1 min read

Man arrested for protecting schoolgirls with gun in Kerala

18.9.2022
கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதர் பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு சென்றவர் கைது

தெருநாய்கள்

கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் அலைந்து திரியும் நாய்கள் கூட்டம் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பது இல்லை. இந்த ஆண்டு இதுவரை நாய்கள் கடித்து 21 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி, சாலைகளில் அங்கும் இங்கும் ஓடும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் தெரு நாய்களால் விபத்தில் சிக்கி வருகிறார்கள். நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சில பகுதிகளில் நாய்களை கொடூரமாக கொன்று தூக்கிலிடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

துப்பாக்கி

இதற்கிடையே, நாய்களை கொல்வதும், அவைகளை துன்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமைகாசர்கோட்டில், பள்ளிக்கு செல்லும் மாண விகளுக்கு, ஒரு சிறுமியின் தந்தை சமீர் (வயது 50) என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை (ஏர்கன்) ஏந்தி பாதுகாப்புக்கு சென்றார். அது சமூகவலைதளத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து சமீரை பேக்கல் போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது பீதியை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.