தமிழகத்தில் இன்று 492 பேருக்கு கொரோனா
1 min read
Today 492 people have corona in Tamil Nadu
18.9.2022
தமிழகத்தில் இன்று (செப்.18) 492 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,76,814 ஆக அதிகரித்துள்ளது. இன்று( செப்.18) 431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,33,848 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( செப்.18) கோவிட் பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இதனையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 38,040 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (செப் 17ம் தேதி ) 105 ஆக இருந்த நிலையில் இன்று(செப்18 ம் தேதி) சென்னையில்109 ஆக உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,926 ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.