June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 4,510 பேருக்கு தொற்று

1 min read

4,510 new infections in India

21.9.2022

இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 4,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 4,043 ஆக இருந்த நிலையில் இன்று 4,510 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,640 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,72,980 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 47,379 லிருந்து 46,216 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,403 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,16,95,51,591 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.