ராமேஸ்வரம் கோவிலில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தீர்த்தமாடினார்
1 min read
At Rameswaram temple, Minister Anbil performed Poiyamozhi Thirtham
20.9.2022
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பக்தி பரவசத்துடன் புனித தீர்த்தமாடினார்.
அன்பில் பொய்யாமொழி
ராமேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் கழிப்பறை குடிநீர் சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக இன்று (செப்.,21) மஹாளய பட்சத்தையொட்டி காலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தனுஷ்கோடி சென்ற அவர், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்தார்.
அன்பில் பொய்யாமொழி ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தமாடியுள்ளார். பின்னர் சாமி தரிசனம் செய்தார்.