காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
2 terrorists shot dead in Kashmir
25.9.2022
காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் கும்வாரா மாவட்டம் மெஷில் பகுதியில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசாருடன் இணைந்து ராணுவத்தினர் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, மெஷில் பகுதியில் உள்ள தெக்ரி நர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளிடமிருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 கைதுப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.