முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்
1 min readAnil Chauhan has been appointed as the Commander-in-Chief of the Triforce
29.9.2022
இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படைகளின் தளபதி
முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி நீலகிரி, குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய இராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.