தமிழகம், இந்திய அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
1 min read
Details of today’s corona virus in Tamil Nadu and India
4.10.2022
தமிழகத்தில் இன்று புதிதாக 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டு உள்ளது. இந்திய அளவில் ஒரு நாளில் 1 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 85 ஆயிரத்து 006 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 41 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,047 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அளவில்
இந்திய அளவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 968 ஆக குறைந்தது. கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 481 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 40 லட்சத்து 36 ஆயிரத்து 152 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று இதில் 1,528 குறைந்தது. தற்போது, 34 ஆயிரத்து 598 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 15 பேர் பலியானார்கள். எண்ணிக்கை மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 716 ஆக அதிகரித்தது. இதுவரை மொத்தம் 218 கோடியே 80 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.