June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சிறுமிகளின் கால்களை கழுவி ‘கன்யா பூஜை’ செய்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

1 min read

Yogi Adityanath was the first minister to wash the girls’ feet and perform ‘Kanya Puja’

4/10/2022
நவராத்திரி விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு கன்யா பூஜை செய்து உத்தபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபட்டார்.

நவராத்திரி விழா

நவராத்திரி விழா செப்டம்பர் 26-ம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. நவராத்திரியில் முக்கிய நிகழ்வாக துர்கா பூஜை பண்டிகை நேற்று வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், நவராத்திரிதியின் 9-வது நாளான இன்று உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் கன்யா பூஜை நடைபெற்றது. அதில் பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் பூஜை நடைபெற்றது.

ஆதித்யநாத்

இந்த பூஜையில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு, பெண் குழந்தைகளின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி, பொட்டு வைத்து பூஜை செய்தார். தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் விஜயதசமி பூஜையில் யோகி ஆதித்யநாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.