தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 342 பேருக்கு கொரோனா
1 min read
In Tamil Nadu today, 342 pe0ople are infected with Corona
9.10.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்று (அக்.9ம் தேதி) ஒரே நாளில் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (அக்.9ம் தேதி) 342 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,86,926 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,44,171 ஆக உயர்ந்து உள்ளது.இன்று ( அக்.9 ) கோவிட் பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (அக். 8 ம் தேதி ) 92 ஆக இருந்த நிலையில் இன்று(அக். 9 ம் தேதி) சென்னையில் 84 ஆக உள்ளது. தமிழகத்தில் 4,707 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.0000