June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகள் மாயமானதால் பெற்றோர் விஷம் குடித்தனர்- தந்தை சாவு

1 min read

Betrothed daughter goes missing, parents drink poison – father dies

11.20.2022
உச்சிப்புளி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகள் மாயமானதால் பெற்றோர் விஷம் குடித்தனர். இதில் கணவர் இறந்தார்.

விஷம் குடித்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நம்பாயி வலசையைச் சேர்ந்தவர் மருதமுத்து(வயது 53). இவரது மனைவி கிருஷ்ணவேணி, 45. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி விட்டது. மகள் பூவிதா, ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மகள் படித்து வருகிறார். இவருக்கு வருகிற 28ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியே சென்ற மகள் கடந்த 2 நாட்களாக வீடு திரும்பவில்லை. இதனால், மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தனர். இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். இதில் மருதமுத்து இறந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணவேணி அனுமதிக்கப்பட்டார். இது குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.