June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிராமணப்பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவு

1 min read

Union government directed to file detailed affidavit in anti-demonetisation case

12/10/2022
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிராமணப்பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை

பணமதிப்பிழப்பு

கறுப்பு பணத்தை ஒழிக்க கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. அதாவத அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் பழைய ரூபாய் நோட்டை மாற்ற பொதுமக்கள் வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனாலும் பலர் பணத்தை மாற்ற முடியாமல் தவித்தனர். பலருக்கு வேலை பாதிப்பு ஏற்பட்டது. வரிசையில் நின்றே சிலர் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. விவசாயம், தொழில்துறை உட்பட அனைத்துத் துறைகளின் பொருளாதாரத்திலும் அது பாதிப்புகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நுகர்வுப் பொருள்களின் விற்பனை 40 சதவிகிதமாகச் சரிந்தது.
இதனால் பிரதமர் மோடி பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானார்.

வழக்கு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள், சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

பிரமாண பத்திரம்

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகளின் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்படி நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.