இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா
1 min read
2,141 new cases of corona in India in one day
20.10.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,36,517 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,510 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,82,064 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு இன்று காலைவரைகடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,943ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 4,90,711 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது