June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பெண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.7 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவர்

1 min read

A college student lost Rs. 7 lakh after getting seduced by women’s words of desire

20.19.2022
பெண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி கல்லூரி மாணவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்.

கல்லூரி மாணவர்

கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் 22 வயது கல்லூரி மாணவர். இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நண்பர் ஒருவர் இணையதளத்தில் தேடினால் அழகான பெண்கள் கிடைப்பார்கள் என கூறினார்.
இதனையடுத்து நான் இணையதளத்துக்கு சென்று உல்லாசமாக இருக்க அழகான பெண்கள் எங்கு கிடைப்பார்கள் என்று தேடிப்பார்த்தேன். அப்போது அதில் சில அழகான பெண்களின் கவர்ச்சி படத்துடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால் முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக ஜாலியாக இருக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.

நட்சத்திர ஒட்டல்

இதனையடுத்து அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய நபர் அவருடயை பெயர் குமார் என அறிமுகம் செய்து கொண்டார். அவர் என்னிடம் உல்லாசமாக இருக்க பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாக கூறினார். பின்னர் சில பெண்களின் ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என தெரிவித்தேன்.

இதனையடுத்து அவர் அந்த பெண் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்பும்படி கூறினார். ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை அனுப்பி வைத்தேன். பின்னர் பீளமேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகவரியை கூறினார். அங்கு உள்ள அறையில் தான் இளம்பெண் இருப்பதாக கூறினார்.
இதனையடுத்து நான் அங்கு சென்றேன். பின்னர் நான் அவரை தொடர்பு கொண்டு பெண் இருக்கும் அறை எண்ணை கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர் அந்த பெண்ணின் பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு, அறைக்கு பணம் கொடுக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும். போலீசுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறி என்னிடம் இருந்து தொடர்ச்சியாக பணத்தை அனுப்ப சொன்னார். இவ்வாறாக அவர் என்னிடம் இருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை பெற்று என்னை ஏமாற்றி விட்டார்.
அதன் பின்னர் அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.