June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஓடும் ரெயிலில் தீவிபத்து 150 பயணிகள் உயிர் தப்பினர்

1 min read

150 passengers survived the fire in the moving train

21.10.2022
ஒடிசாவில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

ரெயிலில் தீ

ஒடிசா மாநிலம் பத்ரக் – காரக்பூர் இடையிலான பறக்கும் ரயில் பஹானாகா ரயில் நிலையத்தை அடைந்தபோது, அந்த ரயிலின் கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. புகை வெளியேறுவதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அந்த ரெயிலை நிறுத்த ஓட்டுனருக்கு உத்தரவிட்டனர். அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
கடைசி பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக் கொண்டிருந்த நிலையில், ரெயிலுக்குள் இருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலில் இருந்து வெளியே குதித்து ஓட்டம் பிடித்தனர். பலரை ரெயில்வே அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட பயணிகள், இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடைசி பெட்டியில் ஏற்பட்ட தீ, இரண்டாவது பெட்டி வரை பரவியது. உரிய நேரத்தில் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயை முழுவதுமாக அணைக்கும் வரை, பஹ்னாகா ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களும் புறநகரில் நிறுத்தப்பட்டன. தற்போது விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது’ என கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.