தமிழகத்தில் இன்று 214 பேருக்கு கொரோனா
1 min read
214 people have corona in Tamil Nadu today
22.10.2022
தமிழகத்தில் இன்று 214 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பாதிப்பு நேற்றை விட குறைந்துள்ளது. நேற்று ஒருநாள் பாதிப்பு 222-ஆக பதிவான நிலையில், இன்று தொற்று பாதிப்பு 214- ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் தமிழகத்தில் இன்று ஆண்கள் 120, பெண்கள் 94 என மொத்தம் 214 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 53 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 90,452 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 49,008 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 402 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,316 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.