June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல் காந்தி

1 min read

Rahul Gandhi who whipped himself

3.11.2022
ராகுல் காந்தி இன்று 57-வது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார்.

ராகுல் பாதயாத்திரை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்துகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி அவர் தனது யாத்திரையை தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என அவரது பாதயாத்திரை தொடர்கிறது.
இதில் அவ்வப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலங்களும் சேர்ந்து கொள்கிறார்கள். தற்போது ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தில் யாத்திரையை நடத்தி வருகிறார்.
ராகுல்காந்தி ஐதராபாத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57-வது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க ‘திம்சா’ நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார்.

சாட்டையால் அடித்தார்

அதன்பின்னர் தெலங்கானாவில் பொனாலு பண்டிகையில் பங்கேற்று கொண்ட ராகுல்காந்தி தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும் போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.