இந்தியாவில் புதிதாக 1,216 பேருக்கு கொரோனா
1 min read
1,216 new cases of corona in India
4.11.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 1,216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிபப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 58 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரத்து 181 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு மேலும் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 219.69 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.