உடுமலை அருகே காட்டு யானை தாக்கி சுற்றுலாப் பயணி சாவு
1 min read
A tourist died after being attacked by a wild elephant near Udumalai
4.11.2022
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே காட்டு யானைத் தாக்கியதில் சுற்றுலாப் பயணி இறந்தார்.
சுற்றுலா பயணி
புதுக்கோட்டையைச் சேர்ந்த அக்பல் அலி என்பவர், மூணாறு – உடுமலை சாலையில் இரவில் வேனில் சென்றபோது, சாலையில் வந்த ஒற்றைக் காட்டு யானையைப் பார்த்து ரசிக்க, கீழே இறங்கி அருகே சென்றார். அப்போது, கோபமடைந்த காட்டு யானை தாக்கியதில், அக்பர் அலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் சுற்றுலா செல்லும் பயணிகள், விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.